• Download mobile app
20 Jul 2025, SundayEdition - 3448
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையின் காவல் தெய்வம் கோனியம்மன் கோவில் தேரோட்டம்

March 1, 2017 தண்டோரா குழு

‘கோவையின் காவல் தெய்வம்’ என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

கோனியம்மன் கோவில் டவுன் ஹால் பகுதி பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதைப் போல், இந்த ஆண்டு திருவிழா பிப்ரவரி 14ம் தேதி பூச்சாற்று நிகழ்ச்சியோடு தொடங்கியது. பிப்ரவரி 21ம் தேதி கொடியேற்று விழாவும், பிப்ரவரி 26ம் தேதி திருவிளக்கு வழிபாடும் நடத்தப்பட்டன. செவ்வாயன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் பவனி புதனன்று நடைபெற்றது.

இந்தத் தேரோட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி. நாகராஜன், சட்டப் பேரவை உறுப்பினர் அம்மன் அர்சுனன் ஆகியோரும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனர்.

கோவை ராஜ வீதியில் உள்ள தேர்நிலை திடலில் தொடங்கிய தேரோட்டம் ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி வழியாக மீண்டும் தேர்நிலைத் திடலை அடைந்தது.

கோனியம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். வழக்கம் போல் இந்த ஆண்டும் தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது என்று பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மேலும் படிக்க