• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பார்வை கிடைக்கப்போகிறது மகிழ்ச்சியில் பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி !

October 12, 2018 தண்டோரா குழு

கேரளாவை சேர்ந்த பிரபலமான பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி.பார்வையற்றவரான இவர் பிருதிவிராஜ் நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் இடம்பெற்ற காற்றே காற்றே என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.பின்னர் விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி’ படத்தில் இடம் பெற்ற ‘சொப்பன சுந்தரி நான் தானே’ பாடல் அவரை மேலும் பிரபலப்படுத்தியது.அதன் பின் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற பாடல்களை பாடியுள்ளார்.

இதற்கிடையில்,வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை சினிமா படமாகிறது.இதில் வைக்கம் விஜயலட்சுமி கதாபாத்திரத்தில் கேரளாவில் மீன் விற்று படித்து பிரபலமான ஹனன் நடிக்கிறார்.இந்நிலையில் தனக்கு பார்வை கிடைக்கப்போவதாக விஜயலட்சுமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கண்பார்வை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டே இருந்தேன்.இதற்காக நிறைய பரிசோதனைகள் செய்து சிகிச்சைகள் எடுத்துக்கொண்டேன்.அமெரிக்காவில் டாக்டர்கள் நவீன டெக்னாலஜி மூலம் சிகிச்சை அளித்தார்கள்.அடுத்த வருடம் எனக்கு பார்வை வந்துவிடும் என்று சொல்லி இருக்கிறார்கள்.இப்போது எனக்கு வெளிச்சத்தை உணர முடிகிறது” என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க