• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவில் ரஜினியின் சுல்தான் படத்திற்கு பின் விஜய்யின் மெர்சல் !

August 10, 2018 தண்டோரா குழு

தெறி படத்தின் வெற்றிக்கு பின இயக்குநர் அட்லி – விஜய் கூட்டணியில் கடந்த ஆண்டு(2018) தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் ‘மெர்சல்’.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால்,சமந்தா என 3 ஹீரோயின்கள் நடித்திருந்தனர்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான ‘மெர்சல்’ மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது.உலக திரைப்பட விழாக்களில் மெர்சல் படம் திரையிடப்பட்டு வருகிறது.அதேசமயம் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி தொடர்பான வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மெர்சல் திரைப்படம் தேசியளவில் பிரபலமானது.இதுமட்டுமின்றி ஆசியாவில் சிறந்த திரைப்படமாக மெர்சல் படம் தேர்வானது.

இந்நிலையில்,மெர்சல் படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.ஆம் மெர்சல் படத்தை சீனாவில் வெளியிடுவதற்கான உரிமையை ‘HGC எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.படத்தை மான்டரின் மொழியில் டப் செய்து இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு (2019) தொடக்கத்திலோ சீனாவில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் தங்கல்,பஜ்ரங்கி பாய்ஜான்,சுல்தான் போன்ற இந்திய படங்கள் சீனாவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.இதில் சுல்தான் படத்திற்கு பின் தளபதியின் மெர்சல் படம் சீன மொழியில் டப் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க