• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியின் அடுத்த படம் நாற்காலியா? ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

January 16, 2019 தண்டோரா குழு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான படம் பேட்ட. இப்படம் கடந்த 10ம் தேதி உலகமெங்கும் வெளியானது.

இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இதற்கிடையில், ரஜினி அடுத்ததாக ஏ ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் சமூக, அரசியல் கருத்துக்களை மையமாக வைத்து உருவாகவுள்ளது.

இந்த மாத இறுதி வாரத்தில் படத்தின் படபிடிப்பைத் துவங்க, ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். ரஜினியின் அடுத்தப்படுத்துக்கு நாற்காலி என பெயர் சூட்ட, ஏ.ஆர்.முருகதாஸ் முடிவெடுத்திருப்பதாகக் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில், தன் அடுத்த படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை வதந்திகளை பரப்ப வேண்டாம் என இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க