• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாதவனுக்கு சூர்யா அனுப்பிய குறுஞ்செய்தி!

September 16, 2017 தண்டோரா குழு

சூர்யாவின் ‘2D என்டர்டைன்மெண்ட்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘மகளிர் மட்டும்’.

செப்டம்பர் 14-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தில் மாதவன் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஒரு குறும்செய்தியையும் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

“என் சகோதரர் மாதவனுக்கு, எனக்கு வார்த்தைகள் போதவில்லை, உங்களுக்கு நன்றி சொல்லி மாளாது. நான் உங்களை ஒரு விஷயத்துக்காக அழைத்தேன், ஆனால் நான் குறிப்பிட வேண்டியதை நீங்கள் முன் கூட்டியே புரிந்து கொண்டு, “கவலையை விடுங்கள்.செய்து முடித்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினீர்கள், உங்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் ப்ரோ. நட்பை மிக அழகாக மாற்றிவிட்டீர்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க