• Download mobile app
15 Jul 2025, TuesdayEdition - 3443
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

மாதவனுக்கு சூர்யா அனுப்பிய குறுஞ்செய்தி!

September 16, 2017 தண்டோரா குழு

சூர்யாவின் ‘2D என்டர்டைன்மெண்ட்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘மகளிர் மட்டும்’.

செப்டம்பர் 14-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தில் மாதவன் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஒரு குறும்செய்தியையும் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

“என் சகோதரர் மாதவனுக்கு, எனக்கு வார்த்தைகள் போதவில்லை, உங்களுக்கு நன்றி சொல்லி மாளாது. நான் உங்களை ஒரு விஷயத்துக்காக அழைத்தேன், ஆனால் நான் குறிப்பிட வேண்டியதை நீங்கள் முன் கூட்டியே புரிந்து கொண்டு, “கவலையை விடுங்கள்.செய்து முடித்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினீர்கள், உங்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் ப்ரோ. நட்பை மிக அழகாக மாற்றிவிட்டீர்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க