• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பா.ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம், ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி ‘குண்டு’

December 8, 2018 தண்டோரா குழு

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். அதன் பிறகு மெட்ராஸ், கபாலி, காலா என அடுத்தது வெற்றிப்படங்களை கொடுத்தார்.

தற்போது பாலிவுட்டில் பிர்சா முன்டாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளார். இதற்கிடையில், தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் இயக்குநர் பா.ரஞ்சித் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தார். இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

இந்நிலையில், தனது பிறந்த நாளான இன்று பா.ரஞ்சித் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை இயக்குகிறார். அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய டென்மா இசையமைக்கிறார்.

மேலும் படிக்க