• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகுபலி 3 கதை ரெடியானால் படம் நிச்சயம் எடுப்பேன்– ராஜமெளலி

May 5, 2017 தண்டோரா குழு

பாகுபலி என்ற கதையை வைத்து இரண்டு பாகங்களை இயக்கி ராஜமெளலி இந்திய சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தியுள்ளார். இதுமட்டுமின்றி இந்திய அளவில் பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதில்,கடந்த 28ம் தேதி வெளியிடப்பட்ட பாகுபலி 2 படத்தின் வசூல் ரூ.1000 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது திரையிலகினர் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாகுபலி 3 வெளிவருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். பாகுபலி 2 படத்திற்குக் கிடைத்துள்ள உற்சாக வரவேற்பை தொடர்ந்து, பாகுபலி 3 விரைவில் எடுக்க ஆர்வமாக உள்ளேன் என்று இயக்குனர் ராஜமவுலி கூறியுள்ளார்.

ராஜமெளலி கடந்த 2015ம் ஆண்டே இதுபற்றி டுவிட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்,
அதில்,” பாகுபலி 3 எடுக்க ஆர்வமாக இருக்கிறேன். விரைவில் அது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனது தந்தை இதற்கான கதையை தயார்செய்துவிட்டால், படம் நிச்சயம் எடுக்கப்படுவது உறுதி”, எனக் கூறியுள்ளார்.

இதனால், பாகுபலி 3 பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என, ராஜமவுலி ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க