• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் டைட்டில் இது தானா?

February 20, 2019 தண்டோரா குழு

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் Mr.லோக்கல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து ஆர்.ரவிகுமார் மற்றும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கிடையில், கனா படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கார்திக் வேனுகோபால் எனும் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் தனது இரண்டாவது படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் VJ மற்றும் தொலைக்காட்சி நடிகருமான ரியோ ராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

மேலும், புதுமுகம் ஷிரின் கான்சாவ்லா கதாநாயகியாகவும், ராதாரவி, ஆர்.ஜெ விக்னேஷ் மற்றும் ‘Black Sheep’ எனும் யூட்யூப் சேனல் குழுவினரும் இனைந்து நடித்துள்ளனர். தற்போது டாப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில்,இப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க