• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கிரைம் த்ரில்லர் வகையிலான படங்களை இயக்க திரைப்பட இயக்குநர் மிஷ்கினுக்கு தடை

December 24, 2018 தண்டோரா குழு

கிரைம் திரில்லர்’ படம் எடுக்க இயக்குனர் மிஷ்கினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

பைனான்சியர் ரகுநந்தன் என்பவர் இயக்குனர் மிஷ்கின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்,கடந்த 2015-ஆம் ஆண்டு தன் மகனை நடிக்க வைத்து படம் எடுப்பதற்காக இயக்குனர் மிஷ்கினிடம் ரூ. 1 கோடி கொடுத்ததாகவும், ஆனால் அவர் ஒப்பந்தப்படி படம் எடுக்கவில்லை என்றும், தமக்கு நியாயம் கிடைக்கும் வரை அவரது கிரைம் திரில்லர் பாணி படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், மனுதாரரிடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கதையின் அடிப்படையில், வேறு திரைப்படத்தை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.மேலும் ஜனவரி 2-ம் தேதிக்குள் மனு குறித்து இயக்குனர் மிஷ்கின் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.
தற்போது, இயக்குநர் மிஷ்கின் உதயநிதி ஸ்டாலினை நாயகனாக வைத்து சைக்கா என்ற கிரைம் திரில்லர் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க