• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“கமலுக்கு பிறகு நான் பார்த்து அசந்த நடிகர் விஜய் சேதுபதி தான்” : பிரபல நடிகர் புகழாரம்!

June 30, 2017 tamilsamayam.com

இதுவரை நான் இணைந்து நடித்த நடிகர்களில் கமலுக்கு அடுத்தபடியாக வியந்தது என்றால் அது விஜய் சேதுபதியை பார்த்துதான் என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

நடிகர் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் வேதா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகர் மாதவன், உடன் நடித்த விஜய் சேதுபதி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

நடிகர் மாதவன் உலக நாயகன் கமல்ஹாசனுடன் அன்பே சிவம், மன்மதன் அம்பு ஆகிய படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். அதே போல் பாலிவுட்டில் அமீர்கான், சித்தார்த் ஆகியோருடனும் சேர்ந்து நடித்துள்ளார். ஆனால் இது வரை தான் சேர்ந்து நடித்த நடிகர்களில் கமலுக்கு அடுத்ததாக விஜய் சேதுபதி தான் தன்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் என்று மாதவன் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் விஜய் சேதுபதியை பாலிவுட்டுக்கு அழைத்து செல்வேன் என்றும் மாதவன் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க