• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினி கூட்டணியில் உருவாகும் நாற்காலி ?

December 8, 2018 தண்டோரா குழு

காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0′ அண்மையில் வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுமட்டுமன்றி இப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான பேட்ட படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது, ‘பேட்ட’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது அவரின் கேரியரில் 166-வது படமாகும்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் – சந்தோஷ் சிவன் இணைந்து ‘துப்பாக்கி’ மற்றும் ‘ஸ்பைடர்’ படங்களில் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. எனினும், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இப்படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க