• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினி கூட்டணியில் உருவாகும் நாற்காலி ?

December 8, 2018 தண்டோரா குழு

காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0′ அண்மையில் வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுமட்டுமன்றி இப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான பேட்ட படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது, ‘பேட்ட’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது அவரின் கேரியரில் 166-வது படமாகும்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் – சந்தோஷ் சிவன் இணைந்து ‘துப்பாக்கி’ மற்றும் ‘ஸ்பைடர்’ படங்களில் பணிபுரிந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. எனினும், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இப்படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க