• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்பிபி என் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் – ரஜினிகாந்த் !

October 4, 2021 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் சான் பிக்சர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. இப்படம் பொங்கலன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில்,இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது. இப்பாடலை மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலா சுப்ரமணியம் பாடியுள்ளார். இது அவரது கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்று பத்துவிட்டுள்ளார்.

மேலும் படிக்க