கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். தொடர்ந்து மதராசபட்டிணம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது, ஜி.வி.பிரகாஷின் வாட்ச்மேன், தேவி 2, ஆகிய படங்களை முடித்து ஜெயலலிதாவின் பயோபிக் எடுக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் ஏ.எல்.விஜய்.
கடந்த 2014-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் நடிகை அமலாபாலுடன் இவருக்கு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் விவாகரத்து ஆனது. இதற்கிடையில் பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இவர் தமிழில் தியா, மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடத்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில், இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு விளக்கமளித்துள்ள விஜய் தரப்பு, இந்த செய்தியில் உண்மையில்லை என்றும் இருவரும் நல்ல நண்பர்களாக மட்டுமே பழகி வருவதாகவும் கூறியுள்ளது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியான கரு படத்தில் நடிகை சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா