• Download mobile app
04 May 2026, MondayEdition - 3736
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருண் விஜய்க்கு ஜோடியாகும் ரித்திகா சிங் !

February 11, 2019 தண்டோரா குழு

இறுதிச்சுற்று படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் பாக்ஸராக இருந்து நடிகையாக மாறிய ரித்திகா சிங். இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இதையடுத்து ஆண்டவன் கட்டளை ,சிவலிங்கா போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தற்போது இவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பாலாவிடம் பணிபுரிந்த விவேக் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடிக்கவுள்ளார். இந்த படத்தை எக்ஸட்ரா எண்டர்டெயிண்மெண்ட் தயாரிக்கிறது. இது அருண் விஜய் நடிக்கும் 27 வது படம் பாக்ஸர் ஆகும். பாக்ஸர் படத்தில் பத்திரிகையாளராக ரித்திகா சிங் நடிக்கவுள்ளார். ரித்திகா ரிப்போர்ட்டர் ஆக இருந்து பாக்ஸராக மாற முயற்சிப்பார் என்ற தகவலும் நம்பத்தக்க வட்டாரங்களிடமிருந்து கிடைத்துள்ளது.

ஏற்கனவே ஆண்டவன் கட்டளை படத்தில் பத்திரிக்கையாளராக ரித்திகா சிங் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க