May 9, 2017
cineulagam.com
பாகுபலி படத்தில் சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவரது நடிப்பு மெய்சிலிர்க்கவைத்ததாக படம் பார்த்த பலரும் கூறுகின்றனர்.
ஆனால் முதலில் இந்த ரோலில் நடிக்க ஸ்ரீதேவியை தான் ராஜமௌலி அனுகினாராம், ஆனால் அவர் மறுத்துவிட்டார் என செய்திகள் வந்தது. அதற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
பாகுபலியில் நடிக்க ஸ்ரீதேவி 5 கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என கூறி ராஜமௌலி ரம்யா கிருஷ்ணனை தேர்ந்தெடுத்தாராம்.
ரம்யா கிருஷ்ணன் 2.5 கோடி சம்பளத்திற்கு இந்த படத்தை ஒப்புக்கொண்டது அவரை தற்போது புகழின் உச்சிக்கே கொண்டுசென்றுள்ளது.