• Download mobile app
15 Oct 2025, WednesdayEdition - 3535
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் !

April 15, 2017 தண்டோரா குழு

காற்று வெளியிடை வெளியான கையோடு அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்து விட்டார் இயக்குனர் மணிரத்னம்.

‘காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு ‘தளபதி’ இரண்டாம் பாகம் எடுக்கப் போகிறார், ராம் சரணை வைத்து தமிழ் – தெலுங்கில் ஒரு படம் இயக்குகிறார் மணிரத்னம் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.ஆனால், அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராயை வைத்து நேரடியாக ஒரு ஹிந்திப் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் மணிரத்தனம். இதற்காக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே மணிரத்னம் அபிஷேக்பச்சன் ஐஸ்வர்யா ராய் கூட்டணி குரு, ராவணன் ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் மீண்டும் அவர் பாலிவுட்டுக்குத் திரும்புகிறார்.சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படம், எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது. இதுமாதிரியான படங்களை பாலிவுட்டில் தான் கொண்டாடுவார்கள் என நினைத்து அங்கு செல்கிறாராம்.

மேலும் படிக்க