• Download mobile app
16 Jan 2025, ThursdayEdition - 3263
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘பேட்ட’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றார் பிரித்திவிராஜ்!

December 31, 2018 தண்டோரா குழு

காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிதுள்ள இப்படத்தில், ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்தின் இசை மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள கடந்த 28ம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் வெளியாகும் அன்றைய தினம் இத்திரைப்படம் கேரளாவிலும் வெளியாகிறது. இந்நிலையில், கேரளாவின் வெளியீட்டு உரிமையினை மலையாள நடிகர் பிரித்திவி ராஜ் பெற்றுள்ளார்.ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து பிரித்திவிராஜ் தற்போது பிரித்திவி ராஜ் புரடக்சன்ஸ் என்ற பெயரில் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, தனது ‘நைன்’ திரைப்படத்தினை தயாரித்து வருகின்றார். இதற்கிடையில் தற்போது ரஜினியின் பேட்ட திரைப்பட விநியோக உரிமையினை பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,

கேரளாவில் சுமார் 200 திரையரங்குகளில் பேட்ட வெளியிடப்படும் எனவும், லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் பிரேம்ஷ் நிறுவனத்துடன் இணைந்து திரைப்படத்தினை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க