- தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
- தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
- மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
- மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார். இதற்கிடையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நின்றது. அதன் பின் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியது.
இந்த நிலையில் வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘ வணங்கான் ‘ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன் . ஆனால் , கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் , இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது . என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா . இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு , ஒரு படப்பிடிப்பின் அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது . எனவே ‘ வணங்கான் ‘ திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி , ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம் . அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும் , அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது . ‘ நந்தா’வில் நான் பார்த்த சூர்யா , ‘ பிதாமகன் ‘ – இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் . மற்றபடி ‘ வணங்கான் ‘ படப்பணிகள் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் புதிய ரத்த வங்கிதிறப்பு
கிரஷர் சங்கம் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் 9 லட்சம் ரூபாய்க்கு வெள்ள நிவாரண உதவி
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிய சிவராம் நகர் குடியிருப்போர் சங்கம்
250 நோயாளிகளுக்கு 33000 டயாலிசிஸ் செய்ய உதவிய ஆர்சில் நிறுவனம்
கோவை கல்லூரி மாணவிகள் ஒரு மில்லியன் விதை பந்துகளை தயாரித்து சாதனை
கோவையில் சின்மயா மிஷன் சார்பில் டிசம்பர் 10 முதல் ஹனுமான் சாலிசா குறித்த சொற்பொழிவு