February 10, 2022
தண்டோரா குழு
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. எனினும் வசூல் ரீதியில் சாதனை படைத்தது.
இதற்கிடையில் ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் ரஜினியின் 169 வது திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் தான் இயக்க உள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுளளது.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இசையமைக்கவுள்ளார்.
கொரோனா சூழ்நிலைகளை பொறுத்து, 5 முதல் 6 மாதங்களில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.நெல்சன் தற்போது விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.