February 14, 2019
தண்டோரா குழு
கடந்த ஆண்டு துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது நினைவு நாள் வருகிற பிப்ரவரி 24ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதற்கிடையில், சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் போனி கபூர், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், அனில் கபூர், ஸ்ரீதேவியின் தங்கை மகேஷ்வரி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த நிகழ்வில் நடிகர் அஜித் முதலிலேயே வந்து கலந்து கொள்ள, ஷாலினி அவரது சகோதரர் ரிச்சர்டு ரிஷியுடன் ஸ்ரீதேவி திதி நிகழ்வில் கலந்து
கொண்டு மரியாதை செலுத்தினர்.
நடிகர் அஜித் தற்போது ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.