• Download mobile app
10 Mar 2026, TuesdayEdition - 3681
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுனிடம் இருந்து மிஸ் தென் இந்தியா பட்டம் பறிப்பு

June 1, 2019 தண்டோரா குழு

மிஸ் தென் இந்தியா 2016, மிஸ் குயின் ஆஃப் இந்தியா 2016, மிஸ் தமிழ்நாடு ஆகிய பட்டங்களை வென்றவர் மீரா மிதுன். தமிழில் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாங்கள் ஆகிய படங்களில் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.

அழகிப்போட்டிகளில் ஆர்வம் உள்ள இவர் வரும் ஜும் மாதம் 3ம் தேதி சென்னை வடபழனியில் அழகிபோட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில், சமீபத்தில் போலீசில் புகார் அளித்த அவர், தாம் தனியாக அழகிப் போட்டி நடத்த அனுமதி பெற்றுள்ளதாகவும், அதன் காரணமாக தொழில் போட்டியால் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த மிஸ் தென் இந்தியா பட்டத்தை பறிப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியுள்ளது. மேலும், தாங்கள் கொடுத்த பட்டத்தை மீரா மிதுனால் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க