மிஸ் தென் இந்தியா 2016, மிஸ் குயின் ஆஃப் இந்தியா 2016, மிஸ் தமிழ்நாடு ஆகிய பட்டங்களை வென்றவர் மீரா மிதுன். தமிழில் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாங்கள் ஆகிய படங்களில் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.
அழகிப்போட்டிகளில் ஆர்வம் உள்ள இவர் வரும் ஜும் மாதம் 3ம் தேதி சென்னை வடபழனியில் அழகிபோட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில், சமீபத்தில் போலீசில் புகார் அளித்த அவர், தாம் தனியாக அழகிப் போட்டி நடத்த அனுமதி பெற்றுள்ளதாகவும், அதன் காரணமாக தொழில் போட்டியால் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த மிஸ் தென் இந்தியா பட்டத்தை பறிப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியுள்ளது. மேலும், தாங்கள் கொடுத்த பட்டத்தை மீரா மிதுனால் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரசர், குவாரிகள் சங்கத்தின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு
கோவை குமரகுரு கல்லூரி மாணவர்கள் உலகளாவிய சாதனை: மாற்று எரிசக்தி படகு, ரோபோடிக்ஸ் உருவாக்கம் – செய்தி பட
கோவையில் தனது 19வது ஆலையை தொடங்கும் ZF குழுமம்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் நடப்பாண்டு ரூ.7000 கோடி வீட்டு கடன் வழங்க இலக்கு
பி.எஸ். ஜி மருத்துவ மருத்துவமனைக்கு பிறவிலேயே காது கேட்காதவர்களுக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை கண்டறியும் பரிசோதனை கருவி வழங்கல்
பத்து ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி உரிமை பெற்ற ஸ்ரீ நாராயண குரு கல்லூரி