July 22, 2021
தண்டோரா குழு
சூர்யாவின் 40வது படத்திற்கு ’எதற்கும் துணிந்தவன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
சூரரை போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 40வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.