May 10, 2017
தண்டோரா குழு
‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பீட்சா’ போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ்.சமீபத்தில் இவருடன் இணைந்து தனுஷ் படம் ஒன்றினை நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இதன் படப்பிடிப்பு அக்டோபர் 1ம் தேதி துவங்கும் என்றும் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பிரபுதேவாவை சந்தித்து கதை கூறி
இருக்கிறார். அந்த கதை பிரபுதேவாவிற்கு பிடித்துப்போக, உடனடியாக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.
விரைவில் இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில்கையெழுத்து பெறப்படும் என்றும், இந்த படத்தின் நாயகியாக கன்னட நடிகை சம்யுக்தா நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.இதனால், தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் எடுக்கப்படவிருந்த படத்தின் நிலை என்ன❓என்பது தற்போது கேள்விக் குறியாக உள்ளது.