April 3, 2017
tamil.samayam.com
நடிகர் பிரிதிவி ராஜ் லூசிபர் என்ற புதிய படத்தை இயக்க உள்ளார்.
இந்த படம் குறித்து நடிகர் மோகன் லால் மற்றும் எழுத்தாளர் முரளி கோபி ஆகியோரிடம் இன்று பிரிதிவி ராஜ் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த லூசிபர் படக்குழு, இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அமையும் எனவும் மோகன் லாலின் கதாபாத்திரம் மிகவும் பாரட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த படத்தை அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் நாள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.