• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜீத்துக்காகக் 10 வருடங்களாக காத்திருக்கும் இயக்குநர் !

April 29, 2017 தண்டோரா குழு

2007ஆம்ஆண்டு அஜீத்,அசின் நடிப்பில் வெளிவந்த ‘ஆழ்வார்’ படத்தை இயக்கியவர் ஷெல்லா. தற்போது இந்தப் படம் ரிலீஸாகி 10 வருடங்களுக்கு மேலாகிறது.

இந்நிலையில், சமீபத்தில் அஜித பற்றி ஷெல்லா கூறும்போது,

“நான் எஸ்.ஜே.சூர்யாவிடம் ‘வாலி’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய போதிலிருந்தே எனக்கு அஜீத் சாரை தெரியும். ‘ஆழ்வார்’ படத்தின் கதையை விவரித்தபோது, அவருக்கு பிடித்துப் போனதால் உடனே ஓகே சொன்னார். அவர், தமிழக மக்களுடைய ஆழ்வார்.

அவரை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க வேண்டுமென தினம் தினம் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன். என் பட ரிலீஸின்போது கடைசியாக அவரைப் பார்த்தது. கடந்த 10 வருடங்களாக மறுபடி அவரைப் பார்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க