• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் ஒருமனதாக தேர்வு

March 4, 2022 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.கோவை மாநகராட்சியை பொறுத்தவரையில் 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 இடங்களிலும்,அதிமுக 3 இடங்களிலும்,எஸ்.டி.பி.ஐ ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

இதையடுத்து,கோவை மாநகராட்சியின் முதல் மேயராக 19 வார்டில் வென்ற கல்பனா இன்று பொறுப்பேற்றார்.இந்நிலையில்,கோவை மாநகராட்சி துணை மேயராக 92 வது வார்டு திமுக உறுப்பினர் வெற்றிசெல்வன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.தேர்வு பெற்றதற்கான சான்றிதழை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா அவரிடம் வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வசித்து வரும் 92 வது வார்டில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க