• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

33 சிறுவர்கள் உட்பட கடத்தப்பட்ட 7௦ கொத்தடிமைகள் மீட்பு

December 23, 2016 தண்டோரா குழு

கொத்தடிமைத் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகக் கடத்தப்பட்ட 33 சிறுவர்கள் உட்பட 70 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி தரும் இந்தச் சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

அவர்கள் செங்கல் சூளைகள், தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாகப் பணியாற்றுவதற்காக ஒரு பஸ்ஸில் கடத்திச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பஸ்தரில் அந்தப் பேருந்தை வழிமறித்து, அதில் இருந்தவர்களை மீட்டனர்.

“அந்தப் பேருந்தில், 20 சிறுவர்கள், 13 சிறுமிகள் உள்பட 70 பேர் இருந்தனர். அவர்கள் சில ஆயிரம் ரூபாய்க்காக விற்கப்பட்டுள்ளனர்” என்று சிறுவர் பாதுகாப்பு அலுவலர் விஜய் சங்கர் சர்மா தெரிவித்தார்.

அவர்களை ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஆலை அதிபர்களுக்கு விற்கப்பட்டுள்ளனர் என்றும், இந்தச் சம்பவம் தொடர்பாக கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் மறுவாழ்வு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். பிறகு, அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்படுவர்.கடத்தப்பட்ட சிறுவர்கள் பிச்சை எடுக்க வைக்கப்படுவார்கள் சிறுமிகள் விபசாரத்தில் தள்ளப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அவர்கள் பஸ்தர் மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினர். அவை மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளாகும்.

அந்தக் கடத்தல் கும்பல், அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி கடத்துவதாகத் தெரிகிறது.இந்தியாவில் 1 கோடியே 40 லட்சம் பேர் இவ்வாறு கொத்தடிமைகளாகக் கடத்தி வைக்கப்பட்டுள்ளனர் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோல் நாட்டில், 5,466 கடத்தல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்கிறார்கள் அதிகாரிகள்.

மேலும் படிக்க