• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாமியாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மருமகன் – சூலூரில் பயங்கரம்

February 15, 2022 தண்டோரா குழு

சூலூரில் காதல் மனைவி கர்ப்பமானதில் சந்தேகமடைந்த மருமகன் மாமியாரை சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் கண்ணம்பளையம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால், கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி செல்வி மற்றும் மகள் காயத்திரி (22) ஆகியோருடன் வசித்து வருகிறார்.கடந்த 6 மாதங்களுக்கு முன் செல்வி அதே பகுதியைச் சேர்ந்த லாண்டரி கடை வைத்து நடத்தி வரும் ராமசாமி என்பவரது மகன் ஜீவானந்தம் (21), என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில்,காயத்திரி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.காதல் மனைவியின் கர்பத்தில் சந்தேகமடைந்த ஜீவானந்தம் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.இதனால்,காயத்திரி தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்,இன்று அதிகாலை 3 மணியளவில் மனைவி காயத்திரி வீட்டிற்குசென்ற ஜீவானந்தம் தகராறு செய்துள்ளார். அப்போது, அவரை தடுத்து நிறுத்திய மாமியார் செல்வி, விடிந்த பின் வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என
கூறியுள்ளார்.

இதைக் கேட்காத ஜீவானந்தம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாமியார் செல்வியை தலை, முகம் மற்றும் கைகளில் சரமாறியாக வெட்டியுள்ளார்.இதில்செல்வியின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது, ரத்தவெள்ளத்தில் செல்வி கிடந்துள்ளார். அவரை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் மறைந்திருந்த ஜீவானந்தத்தை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். சொந்த மாமியாரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க