• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பஸ்சில் பெண்ணிடம் ரூ.75 ஆயிரம் திருட்டு

February 1, 2022 தண்டோரா குழு

கோவை கிணத்துக்கடவு மணிகண்டபுரத்தை சேர்ந்தவர் கற்பகம் (49). இவர் நேற்று சொந்த வேலை காரணமாக கிணத்துக்கடவில் இருந்து பஸ்சில் கோவை டவுன்ஹால் வந்தார்.

பின்னர் அங்கிருந்த ஆட்சியர் அலுவலகம் செல்வதற்காக மற்றொரு பேருந்தில் ஏறினார். அவர் ரயில் நிலையம் அருகே சென்றபோது, தனது கைப்பையை பார்த்த போது, அதில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்சில் உடன் பயணித்த மர்ம நபர் பணத்தை திருடி சென்றது தெரிந்தது.

இது குறித்து கற்பகம் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க