• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் வீட்டிற்கு வந்து பிரதமர் மோடி இட்லி சாப்பிட வேண்டும் – ஒரு ரூபாய் இட்லி பாட்டியின் ஆசை !

January 31, 2022 தண்டோரா குழு

கோவை ஆலந்தூரை அடுத்த கிராமத்தில் ஒரு ரூபாய் இட்லி விற்பனை செய்து வருபவர் கமலாத்தாள் பாட்டி. இந்த பாட்டி சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர்.

இந்த பாட்டியின் சேவையை பார்த்து
ஆனந்த் மகேந்திரரா, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, பாரத் கேஸ் மற்றும் ஹெச் பி கேஸ் நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் இட்லி அம்மா கமலாத்தாள் தனக்கு மாதம் தோறும் இரண்டு இலவச சிலிண்டர்களை வழங்கி வரும் பாரதப்பிரதமர் மோடியை சந்திக்க ஆவலோடு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், மோடி இருக்கும் இடத்திற்கே சென்று சந்திக்க அனுமதி வேண்டுமெனவும், இல்லையெனில் தன்னுடைய இடத்திற்கு பிரதமர் வந்து இட்லி சாப்பிட்டு செல்லவேண்டும் என பாரத பிரதமருக்கு இட்லி அம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாரதப்பிரதமர் இட்லி பாட்டியின் ஆசையை பூர்ர்தி செய்வாரா பொருந்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க