• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை 63வது வார்டு பகுதியில் போட்டியிடும் ம.நீ.ம கட்சியின் கவுன்சிலர் வேட்பாளர் பிரச்சாரம்

January 27, 2022 தண்டோரா குழு

கழிவுநீர் வடிகால்களை சீரமைத்து தருவது உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்படுவதே தனது முதற் பணி என கோவை 63வது வார்டு பகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கவுன்சிலர் வேட்பாளர் ரம்யா வேணுகோபால் உறுதி அளித்துள்ளார்.

மாநகராட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பம்பரம்போல் சுழன்று வேலை செய்து வருகின்றனர். இதனால் அரசியல் கட்சியினர் மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் பணியில் அனல் பறக்கிறது. இதன் ஒருபகுதியாக கோவை ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவரும்,மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தெற்கு தொகுதி 63வது வார்டு கவுன்சிலர் வேட்பாளருமான ரம்யா வேணுகோபால் மக்களை சந்தித்து தனது வாக்கு கேட்கும் பணியில் அசுர வேகம் காட்டி வருகிறார்.

இதனை ஒட்டி வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார். இதன் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நேர்மையான அரசியலை முன்னிறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சி இத்தேர்தலை சந்திப்பதாக கூறினார்.

மேலும்,63வது வார்டு பகுதியில் இருக்க கூடிய கழிவுநீர் செல்லக்கூடிய வடிகால்களை சீரமைத்து தருவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருவதாக உறுதி அளித்தே மக்களிடம் வாக்கு கேட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க