• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியின் 28வது பட்டமளிப்பு விழா

January 19, 2022 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியின் 28வது பட்டமளிப்பு விழா பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் சுபாராவ் வரவேற்புரையாற்றினார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,

தற்போது பட்டம் பெற்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கொரோனா காலகட்டத்தின் போது மக்களுக்கு சேவையாற்றிவர்கள். வருங்காலங்களில் மக்களுக்கு மருத்துவத் துறையில் சேவையாற்றி, சிறந்து விளங்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவர் இளங்கலை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 148 பேருக்கும், முதுகலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 69 பேருக்கும் பட்டங்கள் வழங்கினார்.

தங்கப்பதக்கம் வென்ற 22 பேருக்கும், அகாடமி அவார்டு வென்ற 18 பேரும் கவுரவிக்கப்பட்டனர். மேலும், சிறந்த மாணவ, மாணவிகள் பிரனீதா , பாலசந்தர் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் மருத்துவக் கல்லூரி
பேராசிரியர்கள் தீபலட்சுமி, ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பேராசிரியர் திவ்யா நன்றி கூறினார்.

மேலும் படிக்க