• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா கட்டுபாடுகள் காரணமாக பக்தர்களின்றி தைப்பூச திருநாள் கொண்டாட்டம்

January 18, 2022 தண்டோரா குழு

கொரோனா கட்டுபாடுகள் காரணமாக பக்தர்களின்றி தைப்பூச திருநாள் கொண்டாடப்பட்டது.

தை பூச விழாவின் போது பக்தர்கள் முருகனை எண்ணி மாலையணிந்து விரதமிருந்து காவடிகளை எடுத்தோ, பாதையாத்திரை மேற்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதன்படி கோவை மருதமலை சுப்ரமணியசுவாமி மலைக்கோவிலில் தைபூச திருக்கல்யாண நிகழ்ச்சி ஆண்டு தோறும் மிக விமர்சையாக கொண்டாடபடும். ஆனால் இம்முறை கொரோனா கட்டுபாடுகளால் பக்தர்களின்றி கொண்டாடப்பட்டது.

பூக்களால் அலங்கரிப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளிய முருகனுக்கு அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க, வள்ளி தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. குருக்கள் வள்ளி, தெய்வானைக்கு மங்கல் நாண் அணிவித்தனர். தொடர்ந்து முருகனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, திருப்புகழ் பாடலுடன் உரல் இடிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் முருகன் வள்ளி தெய்வானை ரதத்தில் வளம் வந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் கோவில் குருக்கள், ஊழியர்கள், பாதுகாப்பிற்காக வந்திருந்த காவலர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்கள் அடிவாரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மலைப்பாதைக்கு செல்லும் படிக்கட்டு பாதை மற்றும் வாகனப்பாதை அடைக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க