கோவையில் இந்து சமய அறிநிலை துறையில் பணியாற்றும் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் 1091 பேருக்கு பொங்கலை முன்னிட்டு புத்தாடை, சீருடைகளை மாவட்ட ஆட்சியர் சமீரண் வழங்கினார்.
தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பணியாற்றும் அர்ச்சகர்கள், பாட்டாச்சாரியார்கள், பூசாரிகள் ஆகியோருக்கு புத்தாடைகள் மற்றும் திருக்கோவில் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கீழ் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் என 429 நபர்களுக்கு புத்தாடைகளும், திருக்கோவில்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் 352 ஆண்கள் மற்றும் 310 பெண்கள் ஆகியோருக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் ரூ.23 லட்சம் மதிப்பிலான இந்த நலத்திட்டங்களை, 1091 பயனாளிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமிரன் நேரில் வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு