• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

30 ஆயிரம் வீடுகளுக்கு விரைவில் பாதாள சாக்கடை இணைப்பு

January 8, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 20 வார்டுகளில் உள்ள 30 ஆயிரம் வீடுகளுக்கு விரைவில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த அதிகாரி கூறியதாவது:

கோவை நஞ்சுண்டாபுரத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து கோவை மாநகராட்சிக்குட்பட்ட 20 வார்டுகளில் நல்லம்பாளையம், ரத்தினபுரி, கணபதி, ஆவாரம்பாளையம், காந்திபுரம், ரேஸ் கோர்ஸ், பி.என். பாளையம், புலியகுளம், சுங்கம், ஒலிம்பஸ், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல்கட்டமாக 30 ஆயிரம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம்.
நஞ்சுண்டாபுரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு நாளைக்கு 40 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க