• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போதையில் குளத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

January 5, 2022 தண்டோரா குழு

கோவையில் போதையில் குளத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை உக்கடம் பெரியகுளத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து மிரட்டல் விடுக்கப்பட்டது.மிரட்டல் விடுத்த அழைப்பேசி எண்ணை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, உக்கடம் குளமும் வெடிகுண்டு நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபர் குனியமுத்தூரை சேர்ந்த பீர்முகமது என்பதும், அவர் கஞ்சா போதையில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
பீர்முகமதுவை குனியமுத்தூர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே, கடந்த 2018, 2021 ஆம் ஆண்டுகளிலும் மெரினா கடற்கரை உட்பட இடங்களில் இதேபோன்று போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க