• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது – தாயும் சேயும் நலம்

January 3, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே, 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது தாயும் சேயும் நலம்.

அன்னுார் அருகே கதவுகரையை சேர்ந்தவர் முருகசாமி, இவரது மனைவி அபர்ணா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது மீண்டும் அபர்ணா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 1:15 மணியளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு சென்ற, 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அபர்ணாவை ஆம்புலன்ஸில் ஏற்றி, அன்னுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். வரும் வழியில் பிரசவ வலி அதிகமானதால், அங்கேயே வாகனத்தை நிறுத்தி, அவசர மருத்துவ உதவியாளர் தனபால், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராஜசேகர் ஆகியோர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

தற்போது, தாயும், குழந்தையும் அன்னுார் அரசு மருத்துவமனையில் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெண் குழந்தை 2 கிலோ 300 கிராம் எடையுடன் நலமாக உள்ளது.ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கு, தம்பதியின் உறவினர்கள், நன்றி தெரிவித்தனர்.

மேலும் படிக்க