• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக 8 நபர்கள் மீது வழக்குப்பதிவு

December 31, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக 8 நபர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மீது சமூகநலத்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான
சட்டபூர்வ வயதாக உள்ளது. இந்த வயதுகளின் கீழ் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை
மீறிய செயலாக கருதப்படுகிறது. குழந்தை திருமனம் நடத்துபவர் மற்றும் ஊக்குவிப்பவர்களுக்கு இரண்டு வருடங்கள் வரை கடுங்காவல் தண்டனை அல்லது அத்துடன் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

கோவை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் சைல்டு லைன் மூலம் குழந்தை திருமன புகார் பெறப்பட்டதை தொடர்ந்து குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட அன்னூர் தொப்பம்பட்டியனூர் பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார்,கோவை கே.கே. புதூரைச் சேர்ந்த விஜயபாரதி, அன்னூர் அருகே காரேகவுண்டப்பாலையத்தை சேர்ந்த விஜய், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மணி , பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண்குமார்,வால்பாறையைச் சேர்ந்த பிரேம்குமார், பொள்ளாச்சி கோட்டூர் பகுதியைச் சேர்ந்த மணிமுத்து மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சபரீஸ்வரன் ஆகிய 8 நபர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள்மீது சமூகநலத்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க சைல்டு லைன் இலவச அழைப்பு எண் 1098 மற்றும் மகளிர் உதவி மைய இலவச தொலைப்பேசி எண்.181 ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க