• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க 5 குழுக்கள் விதி மீறும் விடுதிகள், உணவகங்கள் சீல் வைக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை

December 30, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களில், கொரோனா விதிகளை மீறும் விடுதிகள், உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஆங்கில புத்தாண்டையொட்டி, உணவகங்கள், விடுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால், தனியார் விடுதிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதலை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதி மீறும் விடுதிகள் மீது அபராதம் மற்றும் சீல்வைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாநகரப் பகுதிகளில் 5 மண்டலங்களிலும் கொரோனா வழிகாட்டுதல் முறைகளை மக்கள் பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க மண்டலத்துக்கு ஒரு குழு வீதம், 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர், அந்தந்த பகுதிகளில் உள்ள பொது இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், கடைகள், வணிக நிறுவனங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு விதிமீறுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க