கோவை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களில், கொரோனா விதிகளை மீறும் விடுதிகள், உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆங்கில புத்தாண்டையொட்டி, உணவகங்கள், விடுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால், தனியார் விடுதிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதலை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதி மீறும் விடுதிகள் மீது அபராதம் மற்றும் சீல்வைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மாநகரப் பகுதிகளில் 5 மண்டலங்களிலும் கொரோனா வழிகாட்டுதல் முறைகளை மக்கள் பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க மண்டலத்துக்கு ஒரு குழு வீதம், 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர், அந்தந்த பகுதிகளில் உள்ள பொது இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், கடைகள், வணிக நிறுவனங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு விதிமீறுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு