• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூய்மை தொழில்நுட்ப சவால்களுக்கு தீர்வு கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு கோவை மாநகராட்சி அறிவிப்பு

December 30, 2021 தண்டோரா குழு

தூய்மை தொழில்நுட்ப சவால்களுக்கு தீர்வு கண்டுபிடித்தால் முதல் பரிசாக ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு நகராட்சி நிர்வாக ஆணையரகம், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் மற்றும் கோவை மாநகராட்சி ஆகியவை இணைந்து தூய்மை தொழில்நுட்ப சவால்களான சமூக உட்சேர்க்கை, பூஜ்ஜிய திணிப்பு, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிக்கு சிறந்த தீர்வுகளை உருவாக்குவதற்கு தனி நபர்கள், பொது மக்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் தங்களது தீர்வுகளை எதிர்வரும் ஜனவரி 6ம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்கலாம்.

தீர்வுகளை அனுப்பும்போது தலைப்புகளை குறிப்பிட்டு அனுப்பவும். பெறப்பட்ட தீர்வுகளிலிருந்து சிறந்தவற்றை தேர்வு செய்து தமிழக அரசிற்கு அனுப்பி வைத்து அதன் மூலம் தேர்வு செய்யப்படும் சிறந்த தீர்வுகளுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.2.50 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.1.50 லட்சமும், நான்காம் பரிசாக ரூ.1 லட்சமும், ஐந்தாம் பரிசாக ரூ.75 ஆயிரமும் வழங்கப்படும். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க