• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் உட்பட 28 பேர் அட்மிட்

December 28, 2021 தண்டோரா குழு

கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு, 15 குழந்தைகள் உட்பட, 28 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

சுகாதாரப்பணியாளர்கள் பல்வேறு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு, 20க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற, அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். தற்போது, அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு,15 குழந்தைகள், 13 பெரியவர்கள் என, 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

‘மக்கள் தங்கள் வீட்டை சுற்றிலும், நீர் தேங்குவதை தடுப்பதின் வாயிலாக டெங்கு பரவலை தடுக்கலாம். டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை’ என்றனர்.

மேலும் படிக்க