• Download mobile app
14 Aug 2025, ThursdayEdition - 3473
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைப்போம் -காங்கிரஸ் எம் எல்.ஏ செல்வப்பெருந்தகை

December 28, 2021 தண்டோரா குழு

வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் உள்ள பா.ஜ.க.அரசை அகற்றி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைப்போம் என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை கோவையில் தெரிவித்துள்ளார்.

கோகலே, மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் ஜவகர்லால் நேரு,காமராஜர், இந்திரா காந்தி,என நாட்டின் முக்கிய தலைவர்கள் இருந்த காங்கிரஸ் கட்சி துவங்கி 137 வது நிறுவன ஆண்டு விழாவை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை கோபாலபுரம் பகுதியில் உள்ள காமராஜ் பவனில் 137 வது ஆண்டு துவக்க விழாவில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்து மரியாதை செய்தார்.தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை,

மத்தியில் உள்ள பா.ஜ.க.அரசை அகற்றி,வரும் தேர்தலில் இளம் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்குவதே இந்த நாளில் பிரகடனப்படுத்தாக தெரிவித்தார்.நிகழ்ச்சியில் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க