• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரேநாளில் மது, புகையிலை விற்ற 65 பேர் கைது

December 27, 2021 தண்டோரா குழு

கோவையில் போலீசாரின் சோதனையில் ஒரேநாளில் மது, புகையிலை விற்ற 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகரில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கோவை மாநகரில் கடைவீதி, ஆர்.எஸ்.புரம், வெறைட்டிஹால் ரோடு, பீளமேடு, சரவணம்பட்டி, குனியமுத்தூர், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் மாநகர போலீசார் மற்றும் மது விலக்கு அமல்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மாநகர் முழுவதும் நேற்று ஒரேநாளில் மது, புகையிலைப் பொருட்கள் விற்றதாக 65 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் மற்றும் கிலோகணக்கில் புகையிலைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், சட்டவிரோத மது விற்பனை, கடைகளில் புகையிலைப்பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க