• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் மனு

December 27, 2021 தண்டோரா குழு

பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் தங்களது பல்வேறு கோரிக்கைகளும் உரிமைகளையும் அரசு நிறைவேற்றி தர முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர்.

2016ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உயர்த்தி தர வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.ஓய்வூதியத்திற்கு அரசாங்கம் நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

மருத்துவப்படியை 100 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7850 ரூபாய் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்த வேண்டும் என கூறிய அவர்கள் தமிழகம் முழுவதும் 85000 க்கும் மேற்ப்பட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை நிறைவேற்றவில்லை என்றால் சென்னையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க