• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூபாய் 99க்கு அன்லிமிடெட் கால் பிஎஸ்என்எல் அதிரடி சலுகை

December 17, 2016 தண்டோரா குழு

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ரூ.99க்கு அளவில்லா இலவச அழைப்பு மற்றும் இலவச இணைய வசதிகளை பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான பிறகு பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதைபோல் தற்போது ரிலையன்ஸ் ஜியோவிற்கு கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் பிஎஸ்என்எல் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
அதாவது, பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், வெறும் 99 ரூபாய் ரீசார்ஜில் அளவில்லா இலவச அழைப்புகளையும், 300 எம்பி டேடாவும் பெறலாம். இதன் கால அளவு 28 நாட்கள் ஆகும்.

மேலும், இந்த சலுகை கொல்கத்தா, மேற்கு வங்கம், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பிற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு இதே சலுகை ரூ.119 முதல் 149 வரையிலான ரீசார்ஜ்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரூ.1099க்கு 3ஜி அளவிலா இணைய சேவையை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க