• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூபாய் 99க்கு அன்லிமிடெட் கால் பிஎஸ்என்எல் அதிரடி சலுகை

December 17, 2016 தண்டோரா குழு

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ரூ.99க்கு அளவில்லா இலவச அழைப்பு மற்றும் இலவச இணைய வசதிகளை பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான பிறகு பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதைபோல் தற்போது ரிலையன்ஸ் ஜியோவிற்கு கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் பிஎஸ்என்எல் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
அதாவது, பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், வெறும் 99 ரூபாய் ரீசார்ஜில் அளவில்லா இலவச அழைப்புகளையும், 300 எம்பி டேடாவும் பெறலாம். இதன் கால அளவு 28 நாட்கள் ஆகும்.

மேலும், இந்த சலுகை கொல்கத்தா, மேற்கு வங்கம், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பிற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு இதே சலுகை ரூ.119 முதல் 149 வரையிலான ரீசார்ஜ்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரூ.1099க்கு 3ஜி அளவிலா இணைய சேவையை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க