• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போலி கையெழுத்து மூலம் தாயின் இடத்தை விற்றதாக கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார்

December 21, 2021 தண்டோரா குழு

போலி கையெழுத்து மூலம் தாயின் இடத்தை தனது தாய்மாமா மற்றொருவருக்கு விற்றதாக கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை பூர்வீகமாக கொண்ட லாலி ஆண்டனி என்ற பெண்மணிக்கு கோவை மாவட்டத்தில் அரிசிபாளையம் பகுதியில் 2.46 ஏக்கர் காலி இடம் இருந்ததாகவும், 2006 ல் அவர் இறந்து விட்டதால் அந்த இடத்தை பராமரிக்க லாலி ஆண்டனியின் தம்பி பென்னி என்பவருக்கு லாலி ஆண்டனியின் மகள் லியா 2013இல் பவர் கொடுத்ததாகவும், அவர் மேல் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் 2015இல் கொடுத்த பவரை ரத்து செய்து விட்டதாகவும், ஆனால் தன் தாயாரின் உயிலை வைத்து தாயாரை போன்று போலி கையெழுத்து போட்டு சிற்பி டெவலப்பர்ஸ் உரிமையாளர் வெள்ளிங்கிரி என்பவருக்கு விற்பனை செய்து விட்டதாக விட்டதாகவும், அந்த பத்திரப்பதிவை ரத்து செய்து, போலி கையெழுத்திட்ட பென்னி மற்றும் காலி இடத்தை வாங்கிய வெள்ளிங்கிரி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவரது மகள் லியா, கணவர் ஜியோ ஜேக்கப் என்பவருடன் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

மேலும் படிக்க