• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற பெண்கள் மேம்பாடு குறித்த மாநில அளவிலான மாநாடு

December 20, 2021 தண்டோரா குழு

குட் ஷெப்பர்டு ஹெல்த் கல்வி மையம் மற்றும் டிஸ்பென்சரி அமைப்பு சார்பாக பெண்கள் மேம்பாடு குறித்த மாநில அளவிலான மாநாடு கோவையில் நடைபெற்றது.

கோவையை அடுத்த காரமடை பகுதியில் செயல்பட்டு வரும், குட் ஷெப்பர்டு ஹெல்த் கல்வி மையம் மற்றும் டிஸ்பென்சரி அமைப்பு பழங்குடியின மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் பல்வேறு நிலை சார்ந்தவர்களுக்கு மருத்துவம்,கல்வி,அத்தியாவசி தேவைகள் என பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் சமுதாயத்தில் பெண்கள் மேம்பாடு குறித்த கருத்தரங்கம் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.ஜெர்மனி நாட்டை சேர்ந்த கே.கே.எஸ்.பி.எம்.இசட். உடன் இணைந்து நடைபெற்ற இதில், சென்னை, கோவை, மதுரை,திருச்சி,புதுவை,என பல்வேறு பகுதிகளில் இருந்து, சமூக வளர்ச்சித் துறை வல்லுனர்கள், கல்வியாளர்கள் சமூக அமைப்பு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தலைமை இயக்குனர் சகோதரி.அனில் மேத்யூ தலைமையில் நடைபெற்ற மாநாட்டை கோவை மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் மகளிர் ஆய்வு துறை பேராசிரியர் மற்றும் இயக்குனர் டாக்டர் ஜெனிதா ரோஸ்லின் மகளிர் ஆய்வுத் துறை உதவி பேராசிரியர் டாக்டர் கமலவேணி மற்றும் பத்மாவதி வளர்ச்சி ஆலோசகர் ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இறுதியில் கண்காணிப்பு அலுவலர் ஜோமி நன்றி கூறினார்.

மேலும் படிக்க