• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மலையிலிருந்து இறங்கி சாலையைக் கடந்து சென்ற யானை

December 14, 2021 தண்டோரா குழு

கோவை ஆனைகட்டி சாலை கணுவாயை அடுத்த ராகவேந்திரா நகர் பகுதியில் மலையில் இருந்து யானை ஒன்று இறங்கி சாலையை கடக்க மலையடிவாரத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியில் இருந்த மக்கள் சுதாரித்து உடனடியாக அவ்வழியில் வந்த வாகனங்களை நிறுத்தும்படி சத்தமிட்டனர்.

பிறகு யானையானது சாலையை கடந்து இல்லங்கள் இருக்கும் பகுதிக்குள் சென்றது. உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியை மேற்கொண்டனர்.

நள்ளிரவு நேரங்களில் வழக்கமாக எப்பொழுதாவது இப்பகுதிக்கு வரும் யானை இன்று மாலையிலேயே வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க