• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாஜி வங்கி ஊழியரை தாக்கி நகை பறிப்பு

December 14, 2021 தண்டோரா குழு

கோவை சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (82). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு 10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் வீட்டின் கதவை தட்டியுள்ளார்.

அப்போது சொக்கலிங்கம் கதவைத் திறந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அப்போது அங்கு நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் அவரை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார். அப்போது அவர் திருடன் என கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க