ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான படம்பேச்சுலர்.கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் நாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார்.
இந்தநிலையில்,இப்படக்குழுவினர் கோவையில் உள்ள பல்வேறு திரையங்குகளுக்கு சென்று ரசிகர்கள் முன் தோன்றி நன்றி தெரிவித்தனர்.
இது குறித்து இயக்குனர் சதீஷ் செல்வகுமார் கூறுகையில்,
இப்படம் என் நண்பரின் வாழ்வில் நடந்த நிஜமான கதையாகும்.தற்போது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நான் எதிர்பார்த்ததைவட ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இது எனக்கு மேலும் ஊக்கம் அளித்து உள்ளது. என்னை நம்பி வாய்ப்பளித்த படத்தின் தயாரிப்பாளருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
படத்தின் நாயகி திவ்யபாரதி கூறும்போது,
அறிமுக திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.ஜிவி பிரகாஷுடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. தற்போது மேலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நகர்ப்புற மட்டுமல்லாமல் கிராமப்புற கதாபாத்திரம் கிடைத்தாலும் எடுத்து நடிப்பேன் என்றார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்